தங்களின் வாழ்நாளில் ஒவ்வொரு பத்து மலேசியர்களில் நால்வர் மனநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் என்று மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள் ளனர். இந்த எண்ணிக்கை தொடர் ந்து ஏறுமுகம் காணலாம். இத்தகைய பாதிப்புக்கு உட்பட்டவர்கள் மற்றவர்கள் தங்களை தாழ்வாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் காரணமாக இப்பிரச்சினை குறித்த எண்ணிக்கை விவரம் முழுமையாக தெரியாமல் போகிறது. மன உளைச்சல் மற்றும் இதர மனநோய் சம்பந்தமான விவ காரங்களுக்கு சிகிச்சை வழங் குவதில் முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்று ஐஎம்யு என்ற அனைத்துலக மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் பிலிப் ஜோர்ஜ் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு வாக்கில் 340 மில்லியன் பேர் மன உளைச்சலால் பாதிக்கப்படுவர் என்று உலக வங்கி தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது. மன நோய் என்பது ஏழை எளியவர் களை மற்றும் தனி மையில் இருப்பவர்களை மட்டுமே பாதிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது எவருக்கும் வரும். குறைந்தபட்சம் 10 விழுக்காடு மலேசியர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் பிலிப் ஜோர்ஜ் தெரிவித்தார். ஆசிய மக் கள் தங்களின் மனக்குறைகளை வெளிப் படையாக பேசுவதில்லை. பலர் மன பாதிப்பு பிரச்சினையை ஒரு பலவீனமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்