வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகியதுடன் ஸ்தலத்திலேயே உயிரிழந் தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் எல்டிபி நெடுஞ்சாலையின் 28ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் சுபாங் ஜெயா இடை நிலைப்பள்ளி மாணவர் முகமட் ஷாரிசால் ஹடா ஷஹாருன் (வயது 15) பலியானார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புச் சுவரை மோதியதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில போக்குவரத்து விசாரணை பிரிவின் தலைவர் கமாலுடின் முகமட் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம் செர்டாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்