வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயது ஆடவர் டிரெய்லர் மோதி பலியானார்.இச்சம்பவம் நேற்று காலை 8 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 422.8ஆவது கிலோ மீட்டரில் (புக்கிட் தகார் டோல் சாவடிக்கு அருகில்) நிகழ்ந்தது. சக ஊழியர்களுடன் முகமட் ஷாரோம் டின் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லோரி அவரை மோதித் தள்ளியதுடன் அவ்வழியே வந்த மற்றொரு லோரியையும் மோதியுள்ளது.இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக கோல குபு பாரு மாவட்ட தீயணைப்புப் படையின் அதிகாரி ரொஸ்டி ஷாபி தெரிவித்தார். டிரெய்லர் லோரியால் மோதித் தள்ளப்பட்ட ஆடவர் உயிரிழந்ததை அங்கு வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இறந்தவரின் சடலத்தை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்