img
img

டான்ஸ்ரீ விருதுக்கு ஜொகூர் சுல்தானுக்கு 20 லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்க முன்வந்த ஆடவர் சரண்!
வெள்ளி 31 மார்ச் 2017 13:35:11

img

டான்ஸ்ரீ விருதுக்கு சிபாரிசு செய்வதற்காக ஜொகூர் சுல்தானுக்கு 20 லட்சம் வெள்ளி லஞ்சம் கொடுக்க முன்வந்த 54 வயது ஆடவர் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் சரண் அடைந்தார். அந்த ஆடவர் சரண் அடைவதற்கு நேற்று இரவு வரையில் காலக்கெடு வழங்கிய ஊழல் தடுப்பு ஆணையம் அவ்வாறு ஆஜராகுவதற்கு அந்த நபர் தவறுவாரேயானால் அந்த நபரின் பெயர் அம்பலப்படுத்தப்படும் என்று எச்சரித்து இருந்தது. இந்நிலையில் அந்த நபர் நேற்று மாலையில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சரண் அடைந்துள்ளார் என்று அதன் துணை தலைமை கமிஷனர் டத்தோ அஜாம் பாக்கி தெரிவித்தார். அந்த நபரை விசாரணைக்கு பின்னர் விடுவிப்பதா அல்லது தடுப்புக்காவலில் வைப்பதா என்பது குறித்து இன்று வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அஜாம் குறிப்பிட்டார். டான்ஸ்ரீ விருதுக்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதற்கு தனக்கு 20 லட்சம் வெள்ளியை கொடுப்பதற்கு ஒருவர் முன்வந்ததாக கடந்த சனிக்கிழமை ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்து இருந்தார். அதேவேளையில் திங்கள்கிழமை கோலாலம்பூரில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இது தொடர்பாக சுல்தான் புகார் செய்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img