பகாங் மாநிலத்தின் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்தினைப் பயன்படுத்தும் மாணவர்களின் கனவுகள் நிராசையாகி வருவதாகவே நண்பன் குழுவிற்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்திற்கு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொண் டிருக்கும் டத்தோ ப.கமலநாதனின் செயல்பாடுகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு விடியலை ஏற்படுத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வரும் சாலைக்கான நிர்மாணிப்பினை குத் தகையாளர் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முடிவினைப் ப.கமலநாதன் அறிவித்திருந்தும் லஞ்சாங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் 39 தமிழ்ப் பள்ளிகளின் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் ரகுவும் மீறுகின்றார்களா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் வேண்டி நிற்கின்றது. * டத்தோ ப.கமலநாதனின் முயற்சியையும் மீறுகின்றதாக கருதப்படும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு விவகாரத்தின் வழி; * துணைக் கல்வியமைச்சரின் முடிவைக்கூட யாரும் கேட்கவில்லை என்பது நியாயமா? * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன? * பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா? * ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத போது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா? கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பு விவகாரத்திற்கு மூலகர்த்தாவாக இருக்கும் கல்வியமைச்சின் வெ. 450,000 மானியத்தினை உடனடியாக மீட்டுக் கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி யோடு ஏன் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என நண்பன் குழு வினவுகின்றது. அரசியல் தலையீடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பள்ளிப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்கும் ஒன்றுமே அறியாத சுமார் 20 லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தினைக் கேள்விக் குறியாக்கியிருப்பது சாபமா என்ற வேதனையான கேள்வியே தொக்கி நிற்கின்றது. * துணைக்கல்வியமைச்சரின் ஆணையை மீறியது ஏன்? * பள்ளி மேலாளர் வாரியம் மாணவர்களை வஞ்சிக்கலாமா? * சாலையைப் போடாமலேயே பயன்படுத்தத் திட்டமா? பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வரும் சாலைக்கான நிர்மாணிப்பினை குத் தகையாளர் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முடிவினைப் ப.கமலநாதன் அறிவித்திருந்தும் லஞ்சாங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் 39 தமிழ்ப்பள்ளிகளின் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் ரகுவும் மீறுகின்றார்களா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் வேண்டி நிற்கின்றது. *டத்தோ ப.கமலநாதனின் முயற்சியையும் மீறுகின்றதாக கருதப்படும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு விவகாரத்தின் வழி; *துணைக் கல்வியமைச்சரின் முடிவைக்கூட யாரும் கேட்கவில்லை என்பது நியாயமா? *திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன? *பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா? *ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத போது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா? கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பு விவகாரத்திற்கு மூலகர்த்தாவாக இருக்கும் கல்வியமைச்சின் வெ. 450,000 மானியத்தினை உடனடியாக மீட்டுக் கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி யோடு ஏன் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என நண்பன் குழு வினவுகின்றது. அரசியல் தலையீடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பள்ளிப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்கும் ஒன்றுமே அறியாத சுமார் 20 லஞ்சாங் தோட் டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தினைக் கேள்விக் குறியாக்கியிருப்பது சாபமா என்ற வேதனையான கேள்வியே தொக்கி நிற்கின்றது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்