img
img

அடுக்ககத்தின் படிக்கட்டில் பெட்டிக்குள் இருந்த ஆண் குழந்தை!
புதன் 29 மார்ச் 2017 16:11:41

img

புளோரா டாமன்சாரா அடுக்ககத்தின் படிக்கட்டில் கனிம நீர் பெட்டிக்குள் பிறந்த ஆண் சிசு இருந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே அடுக்ககத்தில் வசித்து வரும் 17 வயது இளம்பெண் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இச்சிசுவை கண்டுள்ளார். இதன் தொடர்பில் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சானி சே டின் தெரிவித்தார். தன் வீட்டிற்கு படிக்கட்டில் ஏறி செல்லும் போது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதாகவும் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்க்கையில் அங்கிருந்த கனிம நீர் பெட்டிக்குள் சிசு இருந்ததாகவும் அந்த இளம்பெண் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்த அடுக்ககத்தின் 8ஆவது மாடிக்கு இடையிலான படிக் கட்டில் சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுத்த சிசுவை அந்த இளம்பெண் தன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். வேலைக்கு சென்றிருந்த தன் தாயாருக்கு இதன் தொடர்பில் தகவல் தெரி வித்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தாயார் போலீசுக்கு தகவல் அளித்ததாக முகமட் சானி தெரிவித்தார். மருத்துவ சிகிச்சைக்காக சிசு சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அச்சிசு சீரான நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img