img
img

சைக்கிள் சவாரி விபத்தில் 8 பேர் மரணித்த விவகாரம்!
புதன் 29 மார்ச் 2017 15:57:16

img

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி சைக்கிள் சவாரியில் ஈடுபட்டிருந்த கும்பலை மோதி எட்டு இளையோர் மரணமடைய காரணமாக இருந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மீது நேற்று ஜொகூர்பாரு போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.எனினும் குற்றம் சாட்டப்பட்ட சாம் கே திங் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். மாஜிஸ்திரேட் சலினா ஒமார் சாம் கே திங்கை 10 ஆயிரம் வெள்ளி பிணையில் விடு விக்க அனுமதித்ததோடு வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கவும் விசாரிக்கவும் தேதியை நிர்ணயித்தார். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ஜொகூர்பாரு, ஜாலான் லிங்காராம் டாலாமில் தனது ஜேகியூபி 9984 எனும் வாகனத்தை ஆபத்தான நிலையில் அல்லது கவனமின்றி வாகனத்தை செலுத்தி முகமட் அரிஸ் டானிஸ் பின் சூல்கீப்லி (வயது 14), முகமட் ஷாருல் இஸ்வான் பின் அசுராய் மி (வயது 14), முகமட் பைர்டாவுஸ் டானிஸ் பின் முகமட் அஷான் (வயது 16), பாவ் சான் பின் ஹல்மி ஜான் (வயது 13), முகமட் அஷார் பின் அமிர் (வயது 16), முகமட் ஹரித் இஸ்கண்டார் பின் அப்துல்லா (வயது 14), ஹமாட் பின் கஸ்ரின் (வயது 16) மற்றும் முகமட் ஷாருல் நிசாம் பின் மருஷன் (வயது 14) ஆகியோர் மரண மடைய காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட் டது. 1987 சாலை போக்குவரத்து சட்டம் 333 பிரிவு 41(1)ன் கீழ் குற்றஞ் சாட்டப்பட்ட சாம் கே திங் குற்றவாளி என கண்டு பிடிக்கப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு மேற் போகாத சிறைத் தண்டனையும் கூடிய பட்சம் 20 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கின்றது. அதுமட்டுமின்றி அவரது வாகன உரிமமும் பறிக்கப்படும். முன்னதாக சாங் கே திங்கிற்கு எதிராக சீன மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில் அதனை மறுத்து அவர் விசாரணை கோரினார். அர சாங்க தரப்பில் துணை பொது பிராசிகி யூஷன் அதிகாரி ரோஸ்லான் மாட் நூரும் சாங் கே திங்கிற்கு வழக் கறிஞர்கள் பைசால் மொக்தார் மற்றும் புஸ் தாமான் மேனன் ஆகியோர் பிரதிநிதித்தனர். வழக்கறிஞர் பைசால் மொக்தார் சாங் கே திங்கின் வாழ்க்கை சூழ்நிலையை விளக்கியதோடு மாதம் 2 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறும் குறைந்த தொகையில் பிணையில் விடுவிக்க மாஜிஸ் திரேட்டை கேட்டுக் கொண்டார்.அதுமட்டுமின்றி அவர் ஒரு டத்தோவின் மகள் என ஊடகங்களில் பரப்பப் பட்ட தகவல்களையும் அவர் மறுத்தார்.எனினும் இது பொது மக்களை அதிகம் ஈர்த்த ஒரு விவகாரமாத லால் தேசிய விவகாரமாகவும் விவாதிக்கப்பட்ட வேளையில் கூடியபட்ச பிணைப் பணத்தை விதிக்குமாறு ரோஸ்மாட் நூர் கேட்டுக் கொண்டார். பிப்ரவரி 18இல் நடந்த அந்த சம்பவத்தின்போது சுமார் 30லிருந்து 40 இளையோர் சவாரியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.அவ்விபத்தில் மேலும் எட்டு இளையோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img