நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலுக்கு மிகப்பெரிய தொகையாக வெ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பொதுத்தேர்தலுக்கான செலவை விட இது ஒரு சிறிய பகுதி மட்டுமே குறைவாகும். பதின்மூன்றாவது பொதுத்தேர்தலுக்கு வெ.46 கோடி செலவிடப்பட்டது. எனினும், தேர்தல் இவ்வாண்டு நடைபெறுமா அல்லது 2018-லா என்பதை பொறுத்தும் இந்த தொகை அமைந்துள்ளது என்று பிரதமர் துறை துணை அமைச் சர் டத்தோஸ்ரீ ரசாலி இப்ராஹிம் கூறினார்.தேர்தல் ஆணையத்திற்காக 6 கோடியே 27 லட்சம் வெள்ளியையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் துணை விநியோக மசோதா மீதிலான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். பதிமூன்றாவது பொதுத்தேர்தலுக்கு வெ.46 மில்லியன் செலவானது. பதினான்காவது பொதுத்தேர்தலுக்கு வெ.45 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டுள் ளோம். ஆனால், தேர்தல் இவ்வாண்டு நடைபெறுமா அல்லது அடுத்த ஆண்டா என்பதை பொறுத்தே இந்த முடிவும் இருக்கும் என்றார் அவர். தேர்தல் ஆணையத்திற்கு வெ.6 கோடியே 27 லட்சத்தை மக்களவை அங்கீகரிக்க வேண்டும். விநியோக மசோதாவில் அரசாங்கம் கோரியுள்ள 308 கோடி வெள்ளியில் இந்த தொகையும் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்