img
img

அன்வார் நீதிமன்றத்தில் ஆஜராக சட்டரீதியான மனுத் தாக்கல்!
புதன் 29 மார்ச் 2017 14:20:25

img

பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது மேல்முறையீட்டிற்காக நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்த அனுமதிக்கும் ஓர் உத்தரவை (ஓடிபி) ரத்து செய்யும் பதிவதிகாரியின் முடிவை ஆட்சேபித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளார்.அன்வாருக்கு வழங்கப்பட்ட ஓடிபி, ஒரு பதி வதிகாரியால் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை தன் வழக்குரைஞரிடம் தெரிவிக்கப்பட்டதாக அன்வாரின் முன்னணி வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நடவடிக்கையின்போது மேல் முறையீட்டு நீதிபதி ரொஹானா யூசோப்பிடம் கூறினார். தனது மேல்முறையீட்டு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக என் கட்சிக்காரருக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. ஆகவே பதிவதிகாரியால் வழங்கப்பட்ட நிர்வாக உத்தரவை ரத்து செய்யுமாறு கோரும் ஒரு மனுவை நாங்கள் தாக்கல் செய்யவிருக்கிறோம் என்று கோபால் கூறினார்.அந்த விசார ணையின்போது ஆஜராகும் உரிமை அன்வாருக்கு உண்டா, இல்லையா என்பது தொடர்பான ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பத்து நாள் அவகாசம் கோரினார். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் இணை வழக்கறிஞர் லத்தீபா கோயா அன்வாரின் விண்ணப்பத்தை செவி மடுக்க ஏப்ரல் 24ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்து இருக்கிறது என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img