கெராத்தாப்பி தானா மெலா யுவிற்கு சொந்தமான இரயில் வண்டியை மேன்மை தங்கிய சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் நேற்று காலை ஜொகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு ஓட்டிச் சென்றார்.காலை 9.27 மணிக்கு ஜே.பி. செண்ட்ரல் எனப் படும் ஜொகூர்பாரு செண்ட்ரல் நிலை யத்திலிருந்து ஆறு வண்டி பெட்டிகளுடன் இரயில் வண்டியை அவர் ஓட்டிச் சென்றார். முன்னதாக காலை 9.00 மணிக்கு இரயில் நிலையம் வந்தடைந்த அவர் சரியாக 9.24 மணிக்கு இரயில் வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் சுல்தான் இப் ராஹிம் இஸ்கண் டார் அமர்ந்தார்.இரயில் வண்டி புறப்படும் முன்னர் மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ அஸ்மி ரொஹானி ஜொகூர்பாரு மாநகர மன்ற டத்தோ பண்டார் எ.ரஹிம் நிண் மற்றும் ஜொகூர் பாரு மாவட்ட இலாகா அதிகாரி முகமட் புவாட் ரட்சுவான் ஆகியோரும் அங்கு காணப்பட்டனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் இரயிலை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றார்.இதனிடையே குளு வாங்கில் இரயில் வண்டியை நிறுத்திய சுல்தான் அருகிலுள்ள மக்களிடம் சிறிது நேரம் அளவலாவினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்