கட்டுப்பாட்டை இழந்த லோரி வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 451ஆவது கிலோ மீட்டரிலுள்ள பள்ளத்தில் குடை சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரி ழந்தார்.அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த லோரி சாலையின் இடது புறத்திலுள்ள தடுப்புச் சுவரை மோதியதுடன் 7 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் தடம் புரண்டுள்ளது. மோசமான சேதாரத்திற்கு ஆளான லோரியின் இருக்கையில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். அங்கு விரைந்த சுங்கை பூலோ தீயணைப்புப் படையினர் பள்ளத்திலிருந்து உயிரிழந்தவரின் சடலத்தை மேலே கொண்டு வந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் சுங்கை பூலோ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்