img
img

சுங்கத்துறை தலைமை இயக்குநரானார் டத்தோ சுப்பிரமணியம்
சனி 25 மார்ச் 2017 17:20:10

img

சுங்கத்துறையின் புதிய தலைமை இயக்குநராக டத்தோ சுப்பிரமணியம் துளசி நியமிக்கப் பட்டிருப்பதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்ஸா கூறினார்.இந்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. சுங்கத் துறை துணை தலைமை இயக்குநராக (அமலாக்கம்) முன்பு பதவி வகித்த சுப்பிரமணியம் (வயது 58), புதிய பதவியை டத்தோஸ்ரீ கஸாலி அகமட்டிடம் இருந்து ஏற்கிறார். நிர்வாக மேலாண்மை, வரி மேலாண்மை மற்றும் அமலாக்கத் துறையில் அவருக்கு பரந்த அனுபவம் உண்டு.அவர் தனக்கிருக்கும் அனுபவம், அறிவுத் திறன், நம்பகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு தனது பொறுப்புகளை ஆக்ககரமாக மேற்கொள்வார் எனவும் உலக தர சுங்கத்துறை சேவையை வழங்கும் இலாகாவின் தூரநோக்கு திட்டத்தை தொடர்வார் எனவும் நான் நம்புகிறேன் என்று அலி ஓர் அறிக்கையில் கூறினார். 1984 ஜூலை 29ஆம் தேதி சுங்கத்துறை அமலாக்க அதிகாரியாக அரசாங்க சேவையில் இணைந்த சுப்பிரமணியம் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார்.சுங்கத்துறை புலனாய்வு (அமலாக்கப் பிரிவு) இயக்குநராகவும் சுங்கத்துறை புலனாய்வுப் பிரிவின் தலைமை உதவி இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img