img
img

லெட்சுமி கொலையில் திடுக்கிடும் பின்னணி!
சனி 25 மார்ச் 2017 11:56:16

img

கழுத்து அறுக்கப்பட்டு எரியூட்டி மிகவும் கோர மாக கொலை செய்யப்பட்ட மின்னியல் நிறுவனம் ஒன்றின் குமாஸ்தா லெட்சுமி த/ பெ வரதன் (வயது 42) படுகொலையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடுமா? என்று போலீசார் தற்போது துருவித் துருவி விசாரணை செய்து வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் ஓர் இந்தியப் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு இருந்த போதிலும் மேலும் பலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதை போலீசார் மறுக்கவில்லை. இதுவரையில் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களையும் விசாரணைக்கு ஏதுவாக ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு தென் கிள்ளான் மாவட்ட போலீசார் நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்த கொலைக்கு பின்னணியாக இருந் தவர்களையும் போலீசார் தேடி வருவதாக அறியப்படுகிறது. ஜாலான் பந்திங், தெலுக் பங்லீமா காராங்கில் உள்ள அம்கோ எனப்படும் முன்பு தொஷிபா மின்னியல் நிறுவனமாக விளங்கிய தொழிற்பேட்டையில் கியூ.சி. எனும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த லெட்சுமியின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் கிள்ளான், ஜாலான் லங் காட், தாமான் கிளாங் ஜெயா, ஜாலான் செலாம்பீட் 25 எனும் சாலையில் எரிக்கப்பட்ட ஒரு காருக்கு அருகில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டு, முகத்தில் ஆழமான காயங்களுடன் எரியூட்டப்பட்ட நிலையில் கிடந்த லெட்சுமியின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டு, கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் சடலத்தின் அருகில் மூன்று கைப்பேசிகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் புதன்கிழமை மதியத்தில் கிள்ளானில் உள்ள ஓர் உணவகத்தில் லலிதாம்பாள் த/பெ பத்மநாபன் (வயது 36) என்பவரையும் பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில் ஒரு டயர் கடையில் ரகுநாதன் த/பெ கணேசன் (வயது 29) என்பவரையும் மற்றும் கிள்ளான், தாமான் டேசாவில் 20 வயதுடைய பிரபுதேவா த/பெ ஆறுமுகம் என்பவரையும் இக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை நடந்த முறையை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது இதுவொரு திட்டமிட்ட கொலை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். லெட்சுமியின் உடல் மீது நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் அளவிற்கு ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது புற தாடை, இரு புற கன்னத்திலும் காயங்கள் காணப் பட்டுள்ளன. உடலின் பின்புறம் மற்றும் தலைமுடி எரிந்து காணப்பட்டது. உயிரிழந்த லெட்சுமி, சிலாங்கூர் கேரித்தீவில் பிறந்தவர். சில மாத காலமாக தனியாக இங்கு தாமான் டேசா உத்தாமாவில் வசித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன் கணவரை அவர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img