டாயிஸ் தீவிரவாதிகள் என நம்பப்படும் 234 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. மேலும் 95 மலேசியர்கள் சிரியா விலுள்ள டாயிஸ் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளதையும் உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகவும் அது கூறியது. அவர்களில் 30 பேர் உயிரிந்துள் ளனர். மேலும் எண்மர் மலேசியா வந்தபோது கைது செய்யப்பட் டனர் என்று உள்துறை அமைச்சு தானா மேரா உறுப்பினர் (தே.மு.) டத்தோ இக்மால் ஹிஷாம் அப்துல் அஸிஸின் கேள்விக்குப் பதிலளித்தது.2015ஆம் ஆண்டு தீவிரவாத துடைத்தொழிப்பு சட்டம், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கை பாதுகாப்பு குற்றச்செயல் சட்டம், 1959ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் உள்துறை அமைச்சு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதேவேளையில், போலீஸ் படை, தொடர்பு, பல்லூடக ஆணையம் ஆகியவற்றின் ஒத்து ழைப்போடு சமூக வலைத் தளங்களை கண்காணித்து வருகிறது என்றார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்