img
img

தீயில் பாதிக்கப்பட்ட இந்திய குடும்பங்கள் ஆவேசம்!
வியாழன் 23 மார்ச் 2017 12:36:38

img

சிலாங்கூர் மாநில அரசுக்கு சொந்தமான பொது மண்டபத்தில் தங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே நிவாரணம் அளிக்கப் பட்டது குறித்து காப்பார் தாமான் செந்தோசா தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்கள் ஏமாற்றம் தெரிவித்தன.இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனில் மாநில அர சுக்கு அக்கறை இல்லாத போக்கையே இந்த நடவடிக்கை காட்டுவதாக காப்பார் தேசிய முன்னணி சமூக நலப் பிரிவின் தலைவர் அகமது ரிடுவான் யஹாயா சாடினார்.வீடுகளையும், உடைமைகளையும் தீயில் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் அக்குடும்பங்களை மாநில அரசு வீதியில் நிறுத்தி வேடிக்கைப் பார்ப்பதா? என்று காப்பார் மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர் மா.கோபாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணியளவில் டேவான் ஸ்ரீ கிராயோங்கிலிருந்து அக்குடும் பங்களை வெளியேறும்படி அப்பொது மண்டபத்தின் பாது காவலர்கள் கட்டாயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.வாடகை வீடுகளை தேடிக் கொள்ளும்படிக் கூறி எங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பொது மண்டபத்தில் தங்குவதற்கு இடமளித்த கிள்ளான் மாவட்ட அலுவலகத்தின் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தீ பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத எங்களிடம் வாடகை வீடுகளை தேடிக் கொள்ளுங்கள் என்று கூறி மாநில அரசு தன்னுடைய கடமையை முடித்துக் கொள்வதா என்று அக்குடும் பங்கள் கேள்வி எழுப்பின. நிவாரண உதவி வழங்கும் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட அக் குடும்பங்கள் தங்களுடைய மனக் குமுறலை தொகுதி தேசிய முன்னணி செயற் குழு வினரிடம் கொட்டித் தீர்த்தனர்.வாடகை வீடுகளுக்கு குடியேறும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அதற்கான முன் பணமும் வாடகைப் பணமும் வழங் குவதாக செமந்தா சட்ட மன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் டரோயா அல்வி உறுதி யளித்துள்ளார். எங்களுக்கு ஏழு மாத வாடகைப் பணம் வழங்கப்பட வேண்டும் என்று அக்குடும்பங்கள் கோரிக்கை எழுப்பின.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img