பெட்ரோல், டீசலுக்கான புதிய விலைகள், வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடக்கம் வாராந்திர அடிப்படையில் அறிவிக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா ஜைனுடின் கூறினார்.ஒவ்வொரு புதன்கிழமையும் அந்த அறிவிப்பு செய்யப்படும். அதற்கு மறுநாள் புதிய விலைகள் அமலுக்கு வரும் என்று அவர் விளக்கம் அளித்தார். பெட்ரோல் நிறுவனங்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர அடிப்படையில் புதிய விலைகளை அறிவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார். நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து சிறப்புக் கழிவு வழங்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் பெட்ரோல் நிலைய சில்லறை வியாபாரிகளும் அமைச்சிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு அவ்வாறு செய்யலாம். அனைத்துலக எண்ணெய் சந்தை விலையை பொறுத்து இதன் விலைகள் அமைந்திடும் என்றார் அவர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்