வங்காள தேச நாட்டவர் ஒருவருக்கு நோக்கமில்லா கொலை புரிந்ததாக குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட இலங்கை ஆடவருக்கு நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிம்பாங் பூலாய் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரூல் இஸ்லாம் ஷா (வயது 40) என்பவருக்கு நோக்கமில்லா கொலை புரிந்ததாக இலங்கை ஆடவரான தலுக்கு குகனேஸ் (வயது 22) மீது குற்றவியல் சட்டம் 304 (பி) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. நேற்று மாஜிஸ்திரேட் முக்தார்ஹாடி முத்தான் போக் முன்னிலையில் இவ்வழக்கு செவிமடுப்புக்கு வந்த வேளையில் இக்குற்றச்சாட்டை தாம் ஒப்புக் கொள்வதாகவும் பண மோசடி காரணமாக தாம் அவசரப்பட்டு விட்டேன் எனக்கு எந்த நோக்கமும் இல்லை என்று நீதிபதியிடம் கோரியதைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட் நபருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். பிராசிகியூஷன் சார்பில் சேர்லி சாய், எதிர்தரப்பில் மஹிந்தர் சிங் ஆஜரானார்கள்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்