கேங் 24 குண்டர் கும்பலைச் சேர்ந்த டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட நபர் உட்பட 22 பேரின் வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன் றத்தில் இருந்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவும் பினாங்கு குற்ற ஆய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய ஓப்ஸ் சந்தாஸ் முத்தி யாரா நடவடிக்கையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் கும்பலின் தலைவன் என நம்பப் படும் வர்த்தகர் டத்தோஸ்ரீ எங் சியான் சியா (வயது 55) என்பவ ரும் ஒருவர். இவர்கள் அனை வரும் சொஸ்மா எனும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்ற சட்டத்தின் கீழ் தடுத்து வைக் கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பினாங்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் ஹமீட் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்