வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறும் வகையில் வழி நடத்தக்கூடிய இடைக்காலத் தலைவர் யார் என்பதை சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என முன்னாளில் சட்டத்துறை அமைச்சராக சேவையாற்றிய டத்தோ ஜாயிட் இப்ராஹிம் நேற்று கூறியுள்ளார். அவரின் அம்முடிவு அடுத்து பிரதமராவது யார் எனத் தீர்மானிக்க இயலாத சூழ்நிலையிலுள்ள நடப்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உதவுவதாக இருக்கும் என ஜாயிட் வலைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேசிய முன்னணிக்கு (தேமு) எதிராக உண்மையிலேயே ஒன்றுபட்டு போராடுவதற்கு எதிர்க் கட்சித் தலைவர்களிடையே உறுதிப்பாடு இல்லை எனும் மனக் குறையை பெர்சே ஆர்வலர் மன்டீப் சிங் அண்மையில் வெளிப்படுத்தி கண்டனத்துக் குள் ளானார். அது தொடர்பில் மன்டீப் சிங்கை தற்காத்து ஜாயிட் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது பல மலேசியர்களின் கருத்துகளைத் தான் மன்டீப் வெளிப்படுத்தியுள்ளார்.தேமு எதிர்கொண்டுள்ள பிரச்சினை களினால் அடுத்த பொதுத் தேர்த லில் எதிர்க்கட்சி வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது எனக் கருதலாம். எனினும் எதிர்க்கட்சியிலுள்ள பல பிரச்சினைகளினூடே எதிர்க் கட்சித் தலை வர் யார் என்பதைத் தீர்மானிக்க இயலாத நிலை உள்ளது. அதனால் எதிர்க்கட்சியினர் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு அநேகமாக இன்னும் முப்பதாண் டுகள் ஆகலாம் என்றும் மன்டீப் கூறியிருந்தார். -மலேசியா கினி
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்