நிறுவனம் ஒன்றுக்கு எழுதித் தந்த காசோலையில் தவறு நடந்துள்ளது என்பதை கவனிக்காமல் அலட்சியப் போக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேலான தொகையை பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து மனநிறைவு கொள்ளாத வர்த்தகர் ஜோன் நேற்று போலீசில் புகார் செய்ததோடு மத்திய வங்கியில் புகார் செய்தார். கடந்த 7.3.2017இல் நிறுவனம் ஒன்றுக்கு வெ. 1500 தொகை கொண்ட வங்கி காசோலையை வழங்கியிருந் தேன். அந்த காசோலையை பெற் றுக் கொண்டவர்கள் அதனை மற்றொரு வங்கியில் சேர்த்துள்ளனர். வங்கி காசோலையில் வெ.1500 என்று எழுதியிருந்தது. ஆனால் எனது கணக் கிலிருந்து வெ.2,500 வெட்டி பட்டுவாடா செய்யப் பட்டிருந்தது. இது குறித்து வங்கிக்கு நேரடியாக சென்று கேட்டபோது காசோவையில் எழுதப்பட்ட தொகைக்கும் தொகை குறிப் பிடும் இடத்தில் எழுதப்பட்ட தொகைக் கும் வேறுபாடு இருந்துள்ளது. சாதாரண எழுத்து பிழையாக இருப்பின் வங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த காசோலையில் ஆயிரத்து ஐனூறு ரிங்கிட் என்று எழுதப்பட்ட நிலையில் 2,500 வெள்ளியை என் கணக்கில் வெட்டி மற்ற தரப் புக்கு கொடுக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினேன்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்