நாட்டின் மீன் கையிருப்பில் 50 விழுக்காடு மீன்கள் வளர்ப்பு மீன்களாக இருக்க வேண்டும் என்பது அரசாங் கத்தின் இலக்கு. அந்த இலக்கை அடையவும் கடல் மீன்களை அதிகம் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் குளத்து மீன் வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச் சர் டத்தோ ஸ்ரீ அஹமட் சப்ரி சிக் கூறினார்.கம்போங் மீன்கள் உட்பட சந்தையில் மக்கள் விரும்பி வாங்கும் மீன்களுக்கு உச்ச வரம்பு விலையை தனது அமைச்சு நிர்ணயிக்காது எனவும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார். தற்போது மழைக்காலம் தொடர்வதால் கம்போங் மீன் வகைகள் போன்றவை விலை அதிகரித்திருப்பதாக சப்ரி கூறினார். கம்போங் மீன் விலை ஒரு கிலோ கிராமிற்கு 20 வெள்ளிக்கும் மேல் அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வால் பயனீட்டாளர்கள் பெரும் சுமையை எதிர்நோக்கியுள்ளனர். கெடாவில் மீனவர்கள் தரையிறக்கும் கெம் போங் மீன்கள் 70 விழுக்காடு குறைந்துள்ளது. கடும்வெயில் நீடிப்பதால் தரையிறக்கப்படும் மீன்களின் எண் ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்