img
img

இந்திய டாக்சி ஓட்டுநர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகள்!!
வியாழன் 16 மார்ச் 2017 11:56:51

img

இந்திய டாக்சி ஓட்டுநர்கள் மீது சுமத்தப்படும் அவதூறு குற்றச்சாட்டுகளை நாங்கள் சாதாரணமாக விடமாட்டோம் என்று மக்கள் கொமுனிகேஷன் வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் முத்து நேற்று கூறினார்.உபர், கிரேப் கார்கள் போன்றவற்றால் டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.தற்போது நாட்டில் எரிவாயுவின் தட்டுப்பாட்டால் டாக்சிகளுக்கு எரிவாயு நிரப்புவதிலேயே எங்களுக்கு நேரமும் காலமும் பாழாகி விடுகிறது. இப்படி பல போராட்டங்களுக்கு மத்தியில் டாக்சி ஓட்டுநர்கள் தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இப்பிரச்சினைகளின் காரணமாக பலர் இத் துறையை விட்டே ஓடி விட்டனர்.இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் டாக்சி ஓட்டுநர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது அவர் களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்து வருகிறது.குறிப்பாக தனது காரில் பயணித்த இந்தியப் பெண் ஒருவரிடம் நகைகளை கொள்ளையடித் ததாக டாக்சி ஓட்டுநர் சுகுமாறனை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சுகுமாறனிடமிருந்து டிராவல்ஸ் போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்த பின் நேற்று மாலை 5.15 மணிக்கு அவரை விடுவித்தனர்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவையாகும். ஆனால் குற்றம் செய்தார் எனக் கூறப்படும் தகவல் வாட்ஸ்அப்பில் நாடு முழுவதும் பரவியுள்ளது. இச்சம்பவத்தால் சுகுமாறனால் எப்படி மீண்டும் டாக்சியை ஓட்ட முடியும். வாடிக்கையாளர்கள் எப்படி துணிந்து அவரின் டாக்சியில் ஏறுவார்கள் என்று முத்து கேள்வி எழுப்பினார்.அன்றாட பிழைப்பை நம்பி தான் அனைத்து டாக்சி ஓட்டுநர்களும் போராடி வருகின்றனர். இப்படி அவர்களின் பிழைப்பில் மண் போடும் வகையிலான அவதூறு குற்றச்சாட்டுகளை சங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது. அதன் அடிப்படையில் சுகுமாறன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் மீது விரைவில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முத்து செய்தியாளர்களிடம் கூறினார்.இதனிடையே சுகுமாறன் சம்பந்தப்படுத்திய கொள்ளை சம்பவம் வாட்ஸ்அப்பில் பரவி வருவது எங்களுக்கு தெரியவந்தது. உடனே இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்யுமாறு சுகுமாறனை நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இருந்த போதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் சுகுமாறனை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததால் சுகுமாறன் விடுவிக்கப்பட்டார் என்று டாக்சி ஓட்டுநர்களில் ஒருவரான ஜோன் கூறினார்.டாக்சி ஓட்டுநர் சுகுமாறனும் ஆதரவு தெரி விப்பதுடன் அவர் குறித்து போலீசாரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் 20க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் நேற்று போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img