img
img

தமிழ்ப்பள்ளிகளும் பட்டதாரியாகும் கனவை நிறைவேற்றும்!
புதன் 15 மார்ச் 2017 12:24:57

img

நகர்ப்புறங்களில் வாழும் இந்திய மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் உட்புறப் பகுதிகளிலும், கிராமப் புறங்க ளிலும் வாழ்ந்து வரும் இந்திய மாணவர்களின் பட்டதாரியாகும் கனவிற்கு உரமிடுவது படிவம் 6 மட்டுமே என்பதனை வலியுறுத்திக் கூறியுள்ளார் தனி யார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் ரூபாதேவி இராஜமோகன். பேரா மாநிலத்தின் சிலிம் ரிவர் நகரில் தற்போது வசித்து வரும் தந்தை இராஜமோகன் பெருமாள் தாயார் சரஸ்வதி தம்பதியரின் மூத்த பிள்ளையான ரூபாதேவி ராஜமோகன் தனது ஆரம்பக் கல்வியை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய நிலையில் தனது இடைநிலைப் பள்ளிக்கான கல்வியை சிலிம் ரிவர், டத்தோ சூல்கிப்ளி முகம்மது இடைநிலைப் பள்ளியிலும், படிவம் 6க்கான கல்வியை அதே பள்ளியிலும் தொடர்ந்து எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதால் மலேசிய பெர்லிஸ் பல்கலைக் கழகத்தில் (Universiti Malaysia Perlis- Unimap) அனைத்துலக வர்த்தகத் துறையில் (Bachelor in International Business) இளங்கலை பட்டப்படிப்பையும் அறவே கடனில்லாமல் கற்ற தாகப் பெருமையோடு கூறுகின் றார் ரூபாதேவி இராஜமோகன். சுங்கை பில் தோட்டத்தில் சாதாரண ரப்பர் மரம் வெட்டும் தொழிலை மேற்கொண்டிருந்த தந்தை இராஜமோகன் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து தங்களது லட்சியக் கனவுகளுக்கு தூணாக நின்றதை நினைவு கூர்ந்திருக்கும் ரூபாதேவி இராஜமோகன் தமிழ்ப் பள்ளியில் கிடைத்த அனுபவமே ஒரு பட்டதாரியாக வேண்டும் என்ற கனவினை விதைத்ததாகக் கூறுகின்றார். புறநகர்ப் பகுதிகளில் வாழும் இந்திய மாணவர்கள் விளம்பரங்களின் மாயையினால் தனியார் கல்லூரிகளில் தஞ்சமடைவதை மறு ஆய்வு செய்துவிட்டு படிவம் 6-இல் உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாணவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆறாம் படிவம் (form 6) தனக்குத் தரமான கல்வியை வழங்கியதால்தான் அரசாங்கப் பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்பு கிட்டியதாகவும் தெளிவாக கூறுகின்றார் ரூபாதேவி இராஜமோகன். ஒவ்வொரு பிள்ளையும் தங்களுக்காகத் தியாகம் செய்திருக்கும் பெற்றோர்களைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனும் லட்சியத்திற்கு படிவம் 6இல் நிச்சயமாகக் கைகொடுக்கும் என்பதை தான் நிரூபித்திருப்பதாகப் பெருமையோடு கூறுகின்றார். கஷ்டப் பட்டு படிப்பதை விடுத்து இஷ்டப்பட்டு படித்தால் படிவம் 6க்கான கல்வி எளிமையாக அமைந்துவிடும் என்ற அறிவுரையையும் முன் வைத்துள்ளார் ரூபாதேவி இராஜமோகன்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img