img
img

23 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:27:10

img

மாற்று குடியிருப்பு நிலத்திற்காக கடந்த 23 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருந்த 32 லுமூட், புண்டூட் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரத்திற்கு இறுதியாக விடியல் பிறந்தது. அந்தப் பாட்டாளி மக்களுக்கு மொத் தம் 86 லட்சத்து 80 ஆயிரத்து 50 வெள்ளி கிடைத்துள்ளது. பாட்டாளி மக்கள் சார்பில் வழக்கை நடத்திய வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலமாக 32 தொழி லாளர்களுக்கும் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு அந்த இந்திய கூட்டுறவுக்கழக நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த சந்திப்பின்போது இவ்விவகாரத்திற்கு சமரசமாக தீர்வு காணலாம் என்று அந்த கூட்டுறவு நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டது. கடந்த மார்ச் 12ஆம் தேதி சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் அந்த இழப்பீட்டு தொகையினை வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்திடம் வழங்கியது. நேற்று பந்தாயில் உள்ள அலுவலகத்தில் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் இதற்கான காசோலையினை எடுத்து வழங்கினார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தொழிலாளிக்கும் இரண்டு லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பீடு தொகை கிட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.1994ஆம் ஆண்டு வாக்கில் அந்த கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து வேலை இழந்த 32 தொழிலாளர்களுக்கு அந்த தோட்டத்திலேயே ஒவ்வொருவருக்கும் தலா 1/4 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதற்கு நிறுவனம் இணக்கம் தெரிவித்து இருந்தது. ஒன்பது ஏக்கர் நிலத்தை 32 பேருக்கு பகிர்ந்தளிப்பதற்கு முடிவு காணப்பட்டது. இதற்காக அந்த தொழிலாளர்ககுக்கு வழங்கப்பட்ட பணி ஓய்வுத் தொகையில் ஒவ்வொருவருக்கும் 5,414 வெள்ளி கழித்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டுறவு நிறுவனம் ஒதுக்கிய நிலமோ மின்சார கம்பி களுக்கு கீழே அமைந்திருந்துள்ள பகுதியாகும். இதனை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். அந்த நிலமே தொழிலாளர்களுக்கு உரியது என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் பிடிவாதமாக இருந்ததால் பாட்டாளிகள் வழக்கு தொடுக்க முடிவு செய்தனர். தங்கள் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் வாதாடினர். இறுதியில் சமரச அடிப்படையில் தொழிலாளர்களின் தேவைகளுக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மனோகரன் மலையாளம் மனநிறைவு தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img