img
img

89 மாணவர்கள் இருந்தும் தமிழ் வகுப்புக்குத் தடை!
திங்கள் 13 மார்ச் 2017 13:48:58

img

செராஸ் தாமான் கியூபெக்ஸில் இயங்கி வரும் தேசியப்பள்ளி, 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 89 தமிழ் மாணவர்கள் 29 சீன மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். இப்பள்ளிக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் அராப் மொழியை கற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இந்திய மாணவர்கள், சீன மாணவர்கள் கண்டிப்பாக அராப் மொழியை படிக்க வேண்டுமென கட்டாயம் இல்லை என குடியிருப்போர் சங்கத்தின் துணைத்தலைவரும் மலேசிய இந்தியர் பென்சீனியர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் அந்தோணி தெரிவித்தார். கல்வி இலாகாவின் விதிப்படி 15 இந்திய மாணவர்கள் இருந்தால் போதும். ஒரு தமிழ் வகுப்பை ஆரம்பிக்கலாம் என தெரிய வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டத்தில் 49 இந்திய பெற்றோர்கள், 10 சீனப் பெற்றோர்கள் கல்வி இலாகாவில் இருந்து (2) இரண்டு அதிகாரிகள் (துணையமைச்சர் ப.கமலநாதன் சார்பில்) தலைமை ஆசிரியர், குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் டத்தோ ரவிசங்கருடன் பொது மக்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். தமிழ் வகுப்பு நடத்த வேண்டுமென்றால் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் நடத்தலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என தலைமை ஆசிரியர் கூறினார். அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலை நேர வகுப்பு ஒத்து வராது. பள்ளி நேரத்தில் வைக்க வேண்டும். அராப் மொழி போதிக்கும் சமயத்தில் தமிழ் வகுப்பையும் நடத்தலாம். சீனப் பாடத்தையும் இணைந்து நடத்த வேண்டுமென அந்தோணி தெரிவித்தார். பல தடவை துணை அமைச்சர் ப.கமலநாதனை தொடர்பு கொள்வதற்கு முயன்றும் முடியவில்லை. கல்வி இலாகாவில் இருந்து வருகை புரிந்த இரண்டு அதிகாரிகளும் வாய் திறக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. துணையமைச்சர் ஏன் மௌனம் சாதிக்கிறார். இதற்கு உடனடியாக கமலநாதன் ஆவன செய்ய வேண்டுமென அந்தோணி குறிப்பிட்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img