கோலசிலாங்கூர் புக்கிட் தாலாங் தோட்டம் (ரிவர் சைட் தோட்டம்) ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு மாசி மகத் திருவிழா மலேசிய நண்பனின் தண்ணீர்ப்பந்தல்! ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் கோலசிலாங்கூர் புக்கிட் தாலாங் தோட்டம் (ரிவர் சைட் தோட்டம்) ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு மாசி மகத் திருவிழா இன்று 12.3.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்திருவிழா நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு சிறப்பு பூஜையும் 8.30 மணிக்கு பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றுதலும் நண்பகல் 12 மணிக்கு மேல் குழந்தை பாக்கிய பூஜையும் நடைபெறும் என ஆலய நிர்வாக சபையின் சார்பில் இரா.குருநாதன் கூறினார். குழந்தை பாக்கியத்திற்கு கணவன் மனைவி இருவரும் வர வேண்டும். பெண்கள் சேலை அணிந்திருப்பது முக்கியம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அர்ச்சனைகள் நடைபெறும். அர்ச்சனைக்குரிய பொருட்களை ஆலயக் கடை யில் பெற்றுக் கொள்ளலாம். மலேசிய நண்பன் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சுவை பானம் வழங் கப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்