img
img

பல உயிர்களைக் கொள்ளை கொண்ட நிலநடுக்கம்.
ஞாயிறு 12 பிப்ரவரி 2017 13:35:02

img

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மிண்டானயோ தீவில் உள்ள சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் சுரிகாயோ மற்றும் அதை சுற்றியுள்ள வீடுகள் குலுங்கின.அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். கடும் குளிரிலும் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்று தஞ்சம் அடைந்தனர். வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்தன. ஏராளமான வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்தன. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டன. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள், பள்ளிகள் இடிந்தன. சுரிகாயோ நகரில் இருந்த பாலம் இடிந்து தரை மட்டமானது. அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. சுரிகாயோவில் பூமிக்கு அடியில் 6.8 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img