img
img

24 மணிநேர கடையில் கொள்ளையிட்ட இருவர் கைது
வெள்ளி 20 ஜனவரி 2017 15:07:09

img

அம்பாங், ஜன.20- பண்டான் இண்டாவில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கடையில் கொள்ளையிட்ட இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதம் 13ஆம் தேதி இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித சோதனை நடவடிக்கையில் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் இங்குள்ள பூங்கா ராயா அடுக்குமாடியில் போலீஸ் அதிகாரிகள் முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொருவரை போலீசார் நள்ளிரவு 1 மணியளவில் பூச்சோங்கில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 118 பல்வகை சிகரெட்டு பொட்டலங்கள், பாராங் கத்தி, தலைக்கவசம், இரு கைப்பேசிகள் உட்பட கொள்ளையிட பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மேல் விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் முகமட் ஜாஹிட் ஹசான் தெரிவித்தார்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
நாட்டில் வேலை செய்ய வங்காளதேச தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி!

அமைச்சர் எம்.குலசேகரன்

மேலும்
img
இம்மாதம் 20ஆம் தேதி பி.எஸ்.எச். உதவித் தொகை!

பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்

மேலும்
img
குளு, குளு கேமரன் மலையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்

மேலும்
img
30 ஆண்டு காலமாக நாட்டின் முதல் எதிரியாக போதைப்பொருள்

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img