img
img

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை
திங்கள் 20 மே 2019 11:59:54

img

கொழும்பு, 

இலங்கையில் 1983ஆம் ஆண்டில் இருந்து தமிழ் ஈழம் என்ற பெயரில் தனிநாடு கேட்டு ஆயுத போராட்டங்கள் தொடங்கின. இதில் 2007ஆம் ஆண்டு வரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி இலங்கை அரசு நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்களும் பலி யானார்கள்.

2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்தது. இலங்கை ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதல் மற்றும் விமானங்களில் இருந்து வீசிய கொத்துக்குண்டுகளால் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் பெண்களும் குழந்தைகளும் கூட தப்பவில்லை.

இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. உலக நாடுகளில் உள்ள தமிழர்களும் இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்போது இலங்கைக்கு விஜயம் செய்த உலக செஞ்சிலுவை சங்க தெற்காசிய பொறுப்பு அதிகாரி, தனது சேவை காலத்தில் தான் கண்ட மிகமோசமான நரகம் இது என்று கூறும் அளவில் இந்த போர்க்காட்சிகள் இருந்தன.

இறுதியாக 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து போரும் முடிவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த போரில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்கு தலால் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று உலக தமிழர்கள் குரல் கொடுத்தனர். ஐ.நா. கலப்பு விசாரணைக்கு பரிந்துரை செய்ததை முதலில் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு பின்னர் மறுத்துவிட்டது.

போர் நிறைவு பெற்று 10 ஆண்டு ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு நீதி வழங்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மனித உரிமை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி விளக்கமளித்துள்ளார். இலங்கை போர் நிறைவுபெற்றது, அந்நாட்டுக்கு சிதைந்த உயிர்கள் மற்றும் சமுதாயத்தை மறுகட்டமைப்பது மட்டுமின்றி உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு உள்ள மரி யாதையையும் மறுகட்டமைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த வாய்ப்பை இலங்கை அரசு வீணாக்கிவிட்டது. இருபக்கமும் நடைபெற்ற வன்முறைகள் பற்றி விசாரணை நடத்தவும் போர்க்குற்றங்க ளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் மற்றும் இழப்பீடு வழங்கவும் தவறிவிட்டது என அவர் கூறி யுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img