img
img

ஜாகர்த்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய இந்தோனேசியா அதிபர் முடிவு 
புதன் 01 மே 2019 17:08:14

img

ஜாகர்த்தா,

இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜாகர்த்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசிய நாட்டின் தலைநகரான ஜாகர்த்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், தற்போதுள்ள பெருநகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும் புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதில் முதல்கட்டமாக இந்தோனேசிய நாட்டின் தலைநகரை ஜாகர்த்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பிரதான ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img