வாஷிங்டன்,
இந்தியாவின் செயற்கைகோள் அழிப்பு சோதனையால், விண்ணில் சிதறி சுற்றிக் கொண்டிருக்கும் 270 துகள்களை அமெரிக்கா கண்காணித்துக் கொண்டிருக்கிறது என அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகணை சோதனையை இந்தியா கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. புவியின் கீழ் சுற்று வட்டப்பாதையில் (லியோ) சுற்றிக் கொண்டிருந்த இந்திய செயற்கைகோள் ஏவுகணை வீசி அழிக்கப்பட்டது.
செயற்கைகோளின் சிதறிய பாகங்கள், விண் துகள்களாக தற்போது விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை இன்னும் இரண்டு வாரத்தில் பூமியில் நுழைந்து எரிந்து சாம்பலாகிவிடும் அல்லது சில துகள்கள் கடலில் விழும். புவியின் கீழ் சுற்றுவட்டப் பாதையில் இந்த சோதனை நடந்ததால், இதன் துகள்களால் மற்ற செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்தியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த சோதனையால் விண்ணில் சிதறிய 270 பாகங்கள், விண் துகள்களாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அது பூமியின் மேற்பரப்பிற்குள் நுழையும் வரை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.அமெரிக்க பாது காப்புத் துறையின் கீழ் செயல்படும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்