img
img

விண்வெளியில் ஆயுதப் போட்டியை உருவாக்கக் கூடாது  
வெள்ளி 29 மார்ச் 2019 16:13:04

img

இஸ்லாமாபாத், 

விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. செயற்கைகோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்தியது பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-

விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.  

எனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img