img
img

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி 
திங்கள் 18 மார்ச் 2019 16:56:56

img

ஜாகர்த்தா, 

இந்தோனேசியாவின் பபுவா மாநிலத்தில் பெய்த கனமழைக்கு 42 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.  இந்தோனேசியாவின் கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள செண்டானியில்  கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கனமழைக்கு 42 பேர்  உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜனவரி மாதம் சுலாவெசி தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img