இஸ்லாமாபாத்,
படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளைப் பயன்படுத்தியோ அல்லது படைகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும்வகையில், நமது படைகள் எப்போதும் உஷாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்