இஸ்லாமாபாத்,
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் தயாராக இருங்கள் என்று ராணுவத்தினரையும் பொதுமக்களையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டார்.தேசிய பாதுகாப்பு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டோக்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது உண்மையல்ல என்று வன்மையாக கண்டிக்கிறோம். பொறுப்பற்ற முறையில் இந்தியா மீண்டும் கற்பனை கதையை அவிழ்த்து விட்டு ள்ளது. இந்தியாவின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை உணராமல், பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உலக பத்திரிகையாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிட்டால், என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வரும். இந்தியா தேவை யற்ற போருக்கு அழைப்பு விடுத்துள்ளது. பதில் தாக்குதலுக்கான இடத்தை பாகிஸ்தான் தேர்வு செய்து வருகிறது. உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் பதி லடி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ராணுவம் நான்காவது நாளாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 8 நாட்களில் இதுவரை 7ஆவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இஸ்லாமாபாத்தில் வெளி யுறவுத் துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்கு பின் முகமது குரேஷி அளித்த பேட்டியில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்தியா எல்லை மீறிய விவகாரத்தை இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, நட்பு நாடுகள் ஆகியவற்றிடம் முறையிடுவோம். இது தவிர நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும். நம் நாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்தியா நடத்திய தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்