img
img

வங்காளதேச விமான கடத்தல் முயற்சியின் பின்னணி என்ன? 
வியாழன் 28 பிப்ரவரி 2019 18:39:11

img

டாக்கா, 

வங்காளதேச விமான கடத்தல் முயற்சியின் பின்னணி குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா வில் இருந்து துபாய்க்கு 148 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், கையில் துப்பாக்கி யுடன் விமானிகள் அறைக்குள் சென்று தான் விமானத்தை கடத்துவதாக கூறினார். 

அதனைத் தொடர்ந்து சிட்டிகிராம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அந்த பயணி தனது உடலில் வெடி குண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும், பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் விமானத்தை தகர்த்துவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனை தொடர்ந்து விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோக்கள் அவரை சுட்டுக் கொன்றனர். 

இந்த நிலையில் டாக்காவைச் சேர்ந்த முகமது அமீது (வயது 25) என்ற அந்த பயணி, தன் மனைவி உடனான பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் ஷேக் ஹசீ னாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக விமானத்தை கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்தி ருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும், வெடிகுண்டுகள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img