img
img

நேப்பாளம் முன்னாள் பிரதமர் துல்சி மரணம் 
வியாழன் 20 டிசம்பர் 2018 13:31:07

img

காத்மாண்டு, 

நேப்பாள நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால்  காலமானார்.  இந்தியாவின் அண்டைநாடான நேப்பாள நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926ஆம் ஆண்டில் பிறந்த கிரி, நேப்பாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார்.  

பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேப்பாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்தார். பின்னர், மன்னர் கியானேந்திர ஷா ஆட்சிக்காலத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்குத் திரும்பினார். அப்போது, பிரதமர் பதவிக்கு நிகராக கருதப்படும் நேப்பாள மந்திரிசபையின் துணைத் தலைவர் பதவியில் நிய மிக்கப்பட்டார். 

இந்நிலையில், சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, புத்தானில்கன்ட்டா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் 93ஆவது வயதில் மரணம் அடைந்தார்.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img