img
img

‘ரா’ நல்லதோர் அமைப்பு சரத்பொன்சேகா 
வியாழன் 22 நவம்பர் 2018 13:26:42

img

கொழும்பு,

இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’  அயல்நாட்டு அரசியல் தலைவர்களை கொல்ல வேண்டிய தேவையில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள சில புலனாய்வு அமைப்புகள் போலன்றி ‘ரா’ அமைப்பானது ஒழுக்க முள்ள அமைப்பு என்றும் சரத்பொன்சேகா கூறியிருப்பது இலங்கை புலனாய்வு அமைப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது இந்த சலசலப்பிற்கு காரணமாகும். இந்தியாவின் உயர் தொழில்சார் வேலைத் திட்டத்தை கொண்ட ‘ரா’ அமைப்பு அயல்நாட்டு தலைவர்களை கொல்லும் நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா கூறி யுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய இந்திய ‘ரா’ அமைப்பு திட்டமிட்டிருப்பதாக அதிபர் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த விசயம் குறித்து கருத்து தெரிவித்த போது அமைச்சர் சரத்பொன்சேகா இதனை கூறினார்.அதேவேளை அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுவது இயல்பு என்று பொன்சேகா தெரிவித்துள்ளார். 

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img