img
img

பிரேசிலின் வரலாறு தீயில் கருகியது!!!
திங்கள் 03 செப்டம்பர் 2018 15:02:34

img

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ அருங்காட்சியம் முழுவதிலும் பற்றிக்கொண்டது. இத்தீயை நிறுத்த ஏழு தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், அருங்காட்சியத்திற்கு அருகாமையில் தீயணைக்கும் அளவிற்கு நீரில்லை என்பதால், கொஞ்சம் தொலைவில் இருக்கும் ஏரியில் இருந்து தீயை அணைக்க நீர் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் காலெடுத்து வைத்த போர்துகீசியர்களால் கட்டப்பட்டது இந்த அருங்காட்சிய கட்டிடம். போர்துக்கீஸை சேர்ந்த ராயல் குடும்பம் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர். பின்னர், இது நீதி மன்றமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1818ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சி யாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் இதை அருங்காட்சியமாக மாற்றியுள்ளனர்.

இதில் சுமார் 2 கோடி வரலாற்று பொருட்கள், ஆவணங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை இருக்கிறது. அவற்றில் பல பொருட்கள் தீயில் கருகிவிட்டன என்று தெரிவித்துள்ளனர். மக்கள் பலர் பிரேசிலின் கலாச்சாரம் தீயில் கருகிக்கொண்டு இருக்கிறது என்று பெரும் சோகத்தில் உள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img