img
img

நவாப் ஷெரிப்பை கைது செய்ய 2 ஹெலிகாப்டர்!
வெள்ளி 13 ஜூலை 2018 13:54:32

img

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.

''பனாமா கேட்'' ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்  ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ், அவரது மருமகன் கேப்டன் சர்தார் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை. மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறை, மருமகனுக்கு 1 ஆண்டு சிறை என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவாப் ஷெரீப்பின் மனைவி சூல்சூம் நவாஸை காண நவாப் ஷெரிப் மற்றும் அவரது மகள் இருவரும் லண்டன்  சென்றுள்ள நிலையில் ஏற்கனவே அவரது மருமகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் திரும்பியுள்ள நவாப்பையும் அவரது மகளையும் கைது செய்ய லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்படும் பட்சத்தில் இருவரும் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனிலிருந்து பாகிஸ்தான் கிளம்பும்போது செய்தியாளர்களை சந்தித்த நவாப் ஷெரிப் ''நான் நாட்டுக்காக போராடுகிறேன் சிறையோ தண்டனையோ என்னை எதுவும் செய்யாது'' என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img