img
img

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல், 30 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
புதன் 20 ஜூன் 2018 13:25:12

img
காபூல், 
 
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். அதனை ஏற்று முதல் முறையாக தலீபான்க ளும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. 
 
மாறாக ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து பரிமாறியதோடு, தலீபான்கள் பொதுமக்களுடன் ‘செல்பி’ படங்களும் எடுத்துக்கொண்டனர். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அதிபர் அஷரப் கனி அறிவித்தார். அதிபரின் இந்த முடிவை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன. ஆனால் ரம்ஜான் பண்டிகை முடிந்து விட்டதால் மீண்டும் ஆயுதங்களை ஏந்த தலீபான்களுக்கு அந்த அமைப்பு உத்தரவிட்டது.
 
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் “போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசு தரப்பு போர் நிறுத்தம் அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், அதே சமயம் பாதுகாப்புபடை வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறபோது தங்களை தற்காத்துக்கொள்ள எதிர் தாக்குதலை நடத்தலாம் என்றும் அதிபர் அஷரப் கனி அறிவித்தார். ஒரு தரப்பு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு தரப்பு போர் நிறுத்தம் தொடருவதாகவும் அறிவித்திருப்பதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
 
இந்நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதலாவது கொலைவெறித் தாக்குதலை தலிபான் பயங்கரவாத இயக்கம் முன்னெடுத்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் பட்கிஸ் மாகாணத்தில் இரண்டு பாதுகாப்பு படை சாவடிகள் பயங்கரவாதிகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்து திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர், இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 30 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img