img
img

இரட்டைக் கொலை கைதிக்கு மரண தண்டனை
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:38:39

img

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தனது சகோதரியையும், மைத்துனனையும் அடித்து படுகொலை செய்ததுடன், மருமகன் மீது கொலை தாக்குதல் முயற்சி மேற்கொண்டமை தொடர்பில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டார். குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் சகோதரரான குணா என்று அழைக்கப்படும் அருணாச்சலம் குகணேஸ்வரன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. குறித்த இரட்டைக்கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து கொலையாளிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், மகன் மீது கொலை முயற்சி தாக்குலுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 இலட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தை வழங்கத் தவறின் மேலும் இரு வருட கடூழிய சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் இளஞ்செழியன் தெரிவித்திருந்தார். குறித்த சம்பவத்தில் மார்க்கண்டு உதயகுமார், வசந்திமால உதயகுமார் ஆகியோர் உயிரிழந்ததுடன், உதயகுமார் குகதீபன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img