img
img

தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு ஜெயில்
சனி 07 ஏப்ரல் 2018 13:46:59

img
தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரபட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது பார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
 
நாட்டையே உலுக்கிய இந்த ஊழல், அரசியல் மற்றும் வர்த்தக மேல்தட்டுக்களுக்கு எதிரான ஆத்திரத்தை மக்களிடையே தூண்டியது. எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
 
பார்க் இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவில்லை என்பதுடன், முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
 
நாட்டில் "மிகப் பெரிய குழப்பத்தை" ஏற்படுத்திய பார்க், "செய்த குற்றத்திற்குரிய வருத்தத்தை தெரிவிப்பதற்கான அடையாளம் கூட இல்ல" என்று நீதிபதி கிம் சே-யோன்  கண்டனம் தெரிவித்துள்ளார்."எங்களால் உதவமுடியாது, ஆனால் இதற்கு அவர்தான் பொறுப்பு என்று கண்டிப்புடன் தெரிவிக்க முடியும்" என்று நீதிபதி கூறினார்.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img