img
img

ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றினோம்-அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 05 ஏப்ரல் 2018 14:01:04

img

வாஷிங்டன்:

‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றினோம். ரஷ்யாவிடம் என்னைவிட யாரும் கடுமையாக இருந்தது இல்லை’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்தில் ரஷ்யாவின் மாஜி உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் சில ரஷ்ய தூதர்களை வெளியேற்றின. இதற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்காவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றியது. அதே நேரம், வெள்ளை மாளிகை வரும்படி ரஷ்ய அதிபர் புடினுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், எஸ்டோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, ‘ரஷ்ய அதிபர் புடினை நீங்கள் நண்பராக கருதுகிறீர்களா அல்லது எதிரியாக நினைக்கிறீர்களா?’ என டிரம்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியதாவது:

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறவை மேம்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. நடக்காமலும் போக லாம். யாருக்கு தெரியும்?  ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம்தான். சீனாவுடன் இணைந்து செயல்படுவதும் நல்ல விஷயம்தான். மற்ற நாடுகளுடனும் உறவை மேம்படுத்திக் கொள்வது கெட்ட விஷயம் அல்ல. எரிசக்தி துறையில் அமெரிக்கா தற்போது வலுவாக உள்ளது. எரிசக்தியில் சுயசார்புடன் இல்லாமல், நாங்கள் ஏற்றுமதியும் செய்கிறோம்.

இது ரஷ்யாவுக்கு நல்ல விஷயமல்ல. அமெரிக்க ராணுவத்துக்கு 700 பில்லியன் டாலர் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தாண்டு 716 பில்லியன் டாலராக உயர்த்தப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான ராணுவத்தை நாங்கள் பெறப்போகிறோம். இது நிச்சயம் ரஷ்யாவுக்கு நல்ல விஷ யமாக இருக்காது. நான் பல செயல்களை செய்துள்ளேன். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் ரஷ்ய தூதரக அதிகாரிகள் நான்கு பேரை மட்டுமே வெளியேற்றின. நாங்கள் 60 பேரை வெளியேற்றினோம். என்னைவிட யாரும் ரஷ்யாவிடம் கடுமையாக இருந்ததில்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img