img
img

நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து நீதிபதி முன் தற்கொலை செய்துகொண்ட ராணுவத் தளபதி
வியாழன் 30 நவம்பர் 2017 17:38:48

img

போஸ்னியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவத் தளபதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிராகரித்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.போஸ்னியா நாட்டில் 1992 - 1995-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது, போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டின் முன்னாள் தளபதி ஸ்லோபோடன் பிராஜில்க் உள்ளிட்ட 6 ஆறுபேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்லோபோடன் பிராஜில்க் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்லோபோடன் உள்ளிட்ட ஆறு பேர் போர்க் குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றமடைந்த ஸ்லோபோடன், நீதிபதி கண் முன்னே எழுந்து நின்று தான் வைத்திருந்த விஷத்தை, “நான் ஸ்லோபோடன் பிராஜில்க். நான் இந்த தீர்ப்பை நிராகரிக்கிறேன். நான் போர் குற்றவாளி அல்ல’ என்று கூறிக் கொண்டே அருந்தினார்.

இந்த சம்பவத்தால் நீதிமன்றத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்லோடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img