ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மொசூல் நகரத்தை ஈராக் அரசு இன்று மீட்டது. போர் உக்கிரமடைந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட் டனர். அப்படி வெளியேற்றப்படும்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் தன் குழந்தை கையில் வைத்திருந்தபடியே வெடியை இயக்கச் செய்து இறந்துள்ளார். கையில் இருந்த அவர் குழந்தையும் இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது. இப்படி அவர் செய்வதற்கு சில கணங்களுக்கு முன்னர் எடுக் கப்பட்ட போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலால் இரண்டு ஈராக் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளதாக தக வல் வந்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன்தீவிர தாக்குதலை ஈராக் ராணு வம் தொடங்கியது. இந்தப் போரினால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிக ளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்