இந்தியாவைத் தொடர்ந்து சீனாவும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறது. இந்நிலையில், ஷிஜியான்-18 என்னும் செயற்கைக்கோளைச் சுமந்துசென்ற ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற அதிநவீன தொழில்நுட்பம்கொண்ட சீன ராக்கெட், ஹைனன் மாகாணத்தில் உள்ள வென்சாங் எனும் இடத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த சில மணி நேரங்களிலேயே, அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது. 7.5 டன் அளவு எடைகொண்டது. 'ராக்கெட், அதன் இயல்பு நிலை யிலிருந்து மாறியது காரணமாக இருக்கலாம்' என சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'லாங் மார்ச்-5 ஒய்-2' ராக்கெட், 25 டன் எடை யைச் சுமந்துசெல்லக்கூடிய அளவு வலிமையானது. சீனா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுபோன்ற சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்