img
img

சிரியாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி; 12 பேர் காயம்
ஞாயிறு 02 ஜூலை 2017 15:05:42

img

டமாஸ்கஸ், சிரியாவில் அரசுக்கு எதிரான வன்முறையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் ராணுவத்தின் துணையுடன் தாக்குதல நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் லட்சக்கணக்கானோர் பலியாகி விட்டனர்.இந்நிலையில், ஐ.எஸ். அமைப் பினரும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினருடன் இணைந்து அமெரிக்க கூட்டு படைகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில், டமாஸ்கஸ் நகரின் கிழக்கே இன்று காலை வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு 3 கார்கள் வந்துள்ளன. அவற்றை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அவற்றில் 2 கார்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து அதில் இருந்த வெடிகுண்டுகள் அழிக்கப்பட் டன. ஆனால் டமாஸ்கஸ் நகரினுள் புகுந்த 3வது கார் தஹ்ரீர் சதுக்கத்தில் வைத்து போலீசாரால் சூழப்பட்ட நிலையில் அதில் இருந்த தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று டமாஸ்கஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 35 பேர் காயமடைந்தனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img