img
img

இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியீடு
செவ்வாய் 13 ஜூன் 2017 17:08:03

img

கொழும்பு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனோர், ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள் ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. கடந்த 2009ம் ஆண்டு மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது இந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதுகுறித்து ஐநா அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோரின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத காரணத்தால் உறவினர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்டப் போரில் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக தற்போதைய அதிபர் சிறிசேன அறிவித்துள் ளார். இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அரசு அறிவிக்க வேண்டும் அவர்களது உறவினர்கள் கடந்த 114 நாட்க ளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img