செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம்: 36 பேரை சுட்டுக்கொன்ற நபர்
ஞாயிறு 04 ஜூன் 2017 16:17:09

img

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூதாட்ட மையத்தில் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகி யுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் உள்ள Resorts World Casino என்ற சூதாட்ட மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி ஹொட்டலுக்கு தீ வைத்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் நடத் திய நபரும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jessie Javier Carlos எனத் தெரிய வந்தது. மேலும், இவர் பிலிப்பைன்ஸ் குடிமகன் எனவும் தீவிரவாதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.சூதாட்டத்திற்கு அடிமை ஆனதால் கணக்கில்லா பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார். இதுபோன்ற ஒரு மனநிலையில் தான் அவர் சூதாட்ட மையத்தில் தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img